ஜனாதிபதி – பிரதமர் சந்திப்பு

237 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் இன்று சந்திக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய பயணத்திற்கான அடிப்படைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment