நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு

440 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் எஸ்.பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்திற்கு வருகைபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகமான உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இன்று காலை முதல் நடைபெற்று கொண்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தில் இவர் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment