ரணில் எடுத்த அதிரடி முடிவு!

415 0

தலைமை அமைச்சர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முகம் கொடுப்பதற்கு தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்த முடிவால் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேன உட்பட அரசியல் பிரமுகர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிலர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு முன்னர் தலைமை அமைச்சர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் ” நான் பதவியை இராஜினாமா செய்வதற்கு எந்தக் காரணம் இல்லை. தேர்தல் ஒன்றில் வெற்றி பெற்றே இந்தப் பதவிக்கு வந்தேன். அவ்வாறு பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றால் ஏனைய அமைச்சர்கள் மற்றும் அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது” என்று தலைமை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment