தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவோம்- மு.க.ஸ்டாலின்

463 0

வருகிற 15-ந்தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

தி.மு.க. செயற்குழு கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

காவிரி பிரச்சனையில் அடுத்தக்கட்டமாக எந்த மாதிரி போராட்டம் நடத்துவது என்பது பற்றி  தி.மு.க.வுடன் ஒத்த கருத்துள்ள கட்சி தலைவர்களை ஒன்று கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்க எனக்கு செயற்குழு அதிகாரம் வழங்கியுள்ளது.

வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்று தி.மு.க. முடிவு செய்துள்ளது.இந்த போராட்டத்தை தி.மு.க. முன்னின்று நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

அ.தி.மு.க. உண்ணாவிரதம் பற்றி கேட்டபோது, கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்திவிட்டு இப்போது போராட்டம் என்கிறார்கள். இதை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றார்.

Leave a comment