பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் கண்ணிவெடி தாக்குதலில் 3 போலீசார் பலி

3489 0

பாகிஸ்தானின் கைபர்-பாக்டுன்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் போலீஸ் வாகனம் சிக்கியதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் கைபர்-பாக்டுன்க்வா மாகாணம், டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள கொலச்சி சாலையில் நேற்றிரவு போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக பயங்கரவாதிகள் வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கியது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அந்த வாகனத்தில் பயணம் செய்த மூன்று போலீசார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மாவட்ட போலீஸ் அதிகாரி சாஹிதுல்லா எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment