ஆதரவளிப்பதா? இல்லையா? – பிரேரணை முன்வைக்கப்படும் தினத்திலேயே முடிவு

491 0

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், அமைச்சருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக சகோதரமொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நேற்றைய கூட்டத்தில் வைத்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும், எனினும் இந்த பிரேரணைக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்படும் தினத்திலேயே முடிவு செய்யப்படும் என்று பங்காளி கட்சிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை குறித்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a comment