ஆனந்த சுதாகரின் பிள்ளைகளின் கல்விக்காக கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள் பண உதவி!

1180 0

கிளிநொச்சி நகை வாணிப உரிமையாளர்கள், நகைத் தொழிலாளர்கள் இணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆனந்த சுதாகரின் வீட்டுக்கு சென்று பிள்ளைகளின் எதிர்கால கல்விக்காக ஒருதொகை பணத்தை பிள்ளைகளிடம் வழங்கியுள்ளனர்.

மேலும் இவர்களின் கல்வி நடவடிக்கைக்காக உதவ தயாராக உள்ளதாகவும், ஆனந்த சுதாகர் விடுதலையாகி குடும்பத்தாருடன் இணைய இறைவனை பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை வடக்கு கிழக்கு பகுதிகளில் நடாத்தப்பட்ட கையெழுத்து பிரதிகளுடன் மகஜர் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்குவதற்காக ஆனந்த சுதாகரின் பிள்ளைகளும், உறவினர்களும் நேற்று (29) சென்றிருந்தனர்.

இதனையடுத்து காலை 9 மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கையெழுத்துப் பிரதிகளை கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பினும் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கு தாமதமாகியமையினால் காலை 10 மணி வரை ஜனாதிபதி காத்திருந்து சந்தித்துள்ளார்.

அத்துடன் மிகவிரைவில் ஆனந்த சுதாகரன் விடுதலை செய்யப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment