புகலிடம் கோரி, சாவில் முடிந்த லோகேஸ்வரன் துரைசாமி!

287 0
  அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் லோகேஸ்வரன் துரைசாமி அகால மரணம் அடைந்துள்ளார்.கடந்த 15ம் திகதி இந்த மரணம் சம்பவித்துள்ளதாக கூறப்படும் அதேவேளை அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சிட்னியில் ஓபன் என்ற புறநகரில் வசித்த லோகேஸ்வரன் துரைசாமியின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.

அதிகாலை வேலை முடித்து வீடு திரும்பும் போது அவசரகால உதவி பெற அழைக்கும் தொலைபேசி எண்ணை அழைத்து பொலிசாருடன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிறகு குறுகிய நேரத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை பொலிசாரின் தகவல்களின்படி அவர் மேற்கு சிட்னியின் ரயில் நிலையம் ஒன்றில் தனது உயிரை மாய்த்துக்கொண்டார் என்று கூறப்பட்டுள்ளது.

தஞ்சக் கோரிக்கையாளராக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய லோகேஸ்வரனின் வயதான பெற்றோரும் ஒரு சகோதரனும் ஒரு சகோதரியும் இலங்கையில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் உறவினர்களோ நெருங்கிய நண்பர்களோ இல்லாத ஒரு நிலையில் லோகேஸ்வரனின் இறுதிச் சடங்கை சைவ முறைப்படி எளிமையாக நடத்துமாறு குடும்பத்தார் கோரியுள்ளனர்.

மேலும் லோகேஸ்வரன் வசம் சேமிப்போ எதுவிதமான காப்பீடுகளோ இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து அவரது இறுதிச்சடங்குக்காக லோகேஸ்வரனின் நலன்விரும்பிகள் பணம் சேகரித்து வருவதாக தெரியவருகிறது.

Leave a comment