யாழ்.மணியந்தோட்டத்தில் பொலிஸ் காவலரணுக்கு தீ!!

1868 21

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் கடற்கரை வீதியில் உள்ள பொலிஸ் காவலரன் ஒன்று நேற்றைய தினம்(28-03-2018) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.குறித்த பொலிஸ் காவலரண் அமைக்கப்பட நாளில் இருந்து அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடுவதில்லை என்றும் அந்த இடத்தில் பல்வேறு சமூக சீர்கேடுகள் இடம்பெறுகிறது என்று பொதுமக்களால் பல தடவை சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளது.ஆனால், அங்கு பொலிஸார் கடமையில் ஈடுபடாமல் தற்போது வரை அது வெறுமையாக காணப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே நேற்று இரவு இந்த பொலிஸ் காவலரன் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

Leave a comment