சாதாரண தர பரீட்சை சித்தியடைவு வீதம் அதிகரிப்பு

9651 2

இம்முறை கல்வி பொதுத்தராதர சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகள் அடிப்படையில் சித்தியடைவு வேதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

மேலும் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகளில் 9960 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A (9A) சித்திகளை பெற்றுள்ளதாகவும் கணித பாடத்தில் சித்தியடைந்த வீதம் இம்முறை அதிகரித்துள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

2017ம் ஆண்டு சாதாரண தர பெறுபேற்றின் படி உயர்கல்வியை தொடர்வதற்கான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டில் உயர்கல்வியை தொடர்வதற்கு 69.94% மாணவர்கள் தகுதி பெற்றிருந்ததுடன் 2017ம் ஆண்டின் பெறுபேறுகளின் படி 73.05% மாணவர்கள் உயர்கல்வியை தொடரக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனர்.

அதன்படி இம்முறை உயர்கல்வியை தொடரக்கூடியவர்களின் எண்ணிக்கை 3.11% இனால் அதிகரித்துள்ளது.

இதேவேளை 2016ம் ஆண்டு பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் கணித பாட சித்தி 4.43% இனால் அதிகரித்துள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

2016ம் ஆண்டில் கணித பாடத்தில் சித்தியடைந்த மாணவர் வீதம் 62.81% ஆக இருந்ததுடன் 2107ம் ஆண்டில் 67.24% ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அனைத்து பாடங்களிலும் A சித்திகளை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் 8224 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A சித்திகளை பெற்றிருந்ததுடன் இம்முறை 9960 மாணவர்கள் அனைத்து படங்களிலும் A சித்திகளை பெற்றுள்ளதாக பரிட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித மேலும் தெரிவித்தார்

Leave a comment