பெறுமதிவாய்ந்த மாணிக்கக்கற்களுடன் சீனப் பிரஜை கைது

281 0

சீனாவின் சங்காயில் இருந்து சட்டவிரோதமாக மாணிக்கக்கற்களை கடத்திவந்த சீனப்பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து 12 மணிக்கக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 21 மில்லியன் ரூபாவெனவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment