யச இசுறுகம’ புதிய எழுச்சிக் கிராமம் பொதுமக்களுக்கு கையளிப்பு

362 0

புதிய எழுச்சிக் கிராமம் வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 51வது மாதிரிக் கிராமம் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டவுள்ளது.

‘யச இசுறுகம’ என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிராமத்தில் 33 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நீர், மின்சாரம், உட்பாதை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் இந்தக் கிராமம் கொண்டுள்ளது.

இன்று 33 குடும்பங்களுக்கு வீட்டுக்கான உரிமைப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன் 205 பயனாளிகளுக்கு 21 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகை வழங்கப்படவுள்ளது.

இதேவேளை 10 மில்லியன் ரூபா பெறுமதியான ‘சொந்துறு பியச’ வீடமைப்புக் கடனும் 50 பேருக்கு வழங்கப்படவுள்ளதுடன் 1115 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 150 போசணை பொதிகள், பாடசாலை மாணவர்களுக்கு 55 பாடசாலை உபகரணத் தொகுதிகளும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment