வெல்லவாயவில் கடைகள் உடைப்பு – பணம், பொருள் திருட்டு

270 0

வெல்லவாய நகரில் இன்று அதிகாலை ஐந்து கடைகள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு கடைகளிலிருந்த பொருட்கள் மற்றும் பணங்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்ளை இன்று அதிகாலை 2 முதல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் ஒரு கடையிலிருந்து 5 இலட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

வெல்லவாய நகரை சுற்றிய பிரதேசங்களில் நேற்று இரவு பொலிஸ் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற வேளையிலும் இவ்வாறு கடைகள் கொள்ளையிடப்பட்டிருப்பது கவலையளிப்பதாக கடை உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்னர் வெல்லவாய நகரில் ஒரே தடவையில் 9 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டதன் பின்னர் அங்கு பொலிஸ் காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாகவும் அப்பிரதேச கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் மீண்டுமொருமுறை இவ்வாறு கடைகள் கொள்ளையிடப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது என கடை உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment