நம்பிக்கையில்லா தீர்மானம் மீது 4ஆம் திகதி விவாதம்!

201 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12.00 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக கூறியுள்ளார்.

 

Leave a comment