பத்து வருடங்களாக மகனைத் தேடி அலையும் தந்தை!! ஜெனீவா வரைக்கும் சென்று முறையீடு!!

236 0

10 வரு­டங்­க­ளாக எனது மகனை தேடி அலை­கின்றேன் என்று 2008 ஆம் ஆண்டில் காணாமல்போன பல்கலைக்­க­ழக மாண­வன் ஒருவரின் தந்தையார் ஜெனிவாவில் தெரிவித்தார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு மொரட்டுவை பல்­க­லைக்­க­ழகத்தில் கல்வி பயின்ற மாண­வன் காணாமல் போன நிலையில் அவ­ரது தந்­தையான தர்­ம­கு­ல­சிங்கம் தற்­போது நீதி கேட்டு ஐ.நா மனித உரி­மைகள் ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார்.

அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி தனியார் நிறு­வ­னம் சார்பாக பயிற்ச்­சி­களை பெற்­றுக்­கொள்ள சென்­றி­ருந்ததன பின்னர் அவர் வீடு திரும்­ப­வில்லை.

இப்­போது பத்து ஆண்­டுகள் ஆகிவிட்டன இந்த காலத்தில் கொழும்பில் வெள்­ள­வத்தை, கொள்­ளுப்­பிட்டி பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் பொலிஸ் தலைமை அலு­வ­ல­கத்­திலும், குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு உள்­ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் முறைப்­பா­டுகள் செய்­துள்ளேன்.

அதேபோல் அமைச்­சர்கள், தமிழ் அமைச்­சர்கள் உட்பட பல­ரி­டமும் இறுதி­யாக பிர­தமர் மற்றும் ஜனா­தி­பதி என அனை­வ­ரி­டமும் முறைப்­பாடு செய்­துள்ளேன் காணாமல் போனோர் குறித்து கண்­ட­றிய அமைக்­கப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழு­விலும் நான் சாட்­சியம் வழங்­கி­யுள்ளேன்.

எனது மகன் காணாமல் போனமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மான தக­வல்­களை நான் சேக­ரித்­து­ கொண்­டுள்ளேன். இலங்கை மனித உரி­மைகள் ஆணைக்­குழு இயங்­காத பொம்­மை­யாக செயற்­பட்டு வரு­கின்­றது.

பொலிசும் தக­வல்­களை பதிவு செய்­து­கொண்­டுள்­ளதே தவிர உண்­மை­களை கூறவோ கண்­ட­றி­யவோ முடி­யாத நிலைமை காணப்­ப­டு­கின்­றமையே தவிர இது­வரை எந்த முன்னேற்­றங்­களும் இல்லை.பூசா முகாமில் எனது மகன் உள்ளார் என்று ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து எனது மனைவி அங்கு சென்றிருந்தார். எனது மகன் குறித்து முழு­மை­யான தக­வல்­களை கொடுத்து அவரை அடை­யா­ள­ப்ப­டுத்­திய பின்னர் பார்­வை­யிட அனு­மதி வழங்­கப்­ப­டு­வது வழக்கம். அதே வழக்கத்தில் எனது மகன் இருக்­கின்றார் என கூறி அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் யாரு­டைய தலை­யீடு என தெரி­ய­வில்லை எங்­களை தடுத்­து­விட்­டனர். பின்னர் அவர் பிரத்­தி­யே­க­மாக ஒரு சிறையில் இருப்ப­தா­கவும் அங்கு எவ­ருக்­குமே பார்­வை­யிட அனு­மதி இல்லை எனவும் நாம் அறிந்­துகொண்டோம்.

மீண்டும் நாங்கள் சில முயற்­சி­களை மேற்­கொண்ட நிலையில் அங்கு உள்ள சில பொலிஸ் உறுப்­பி­னர்­க­ளுக்கு எனது மகன் தொடர்பான தக­வல்கள் தெரியும் என எங்களால் உறு­தி­யாக கூற முடியும். எனது மகனின் தொலைபேசியை பாவித்தது சரத் சந்திர என்ற ஒரு பொலிஸ் அதிகாரி என்பது நீதிமன்றத்தில் உறுதியாக்கப்பட்டுள்ளது. எனக்கு மேலும் தகவல்கள் கிடைக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment