அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்துவரவே முடியாது- பிரதிபா மஹாநாம

305 0

மத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மஹேந்திரனை இந்நாட்டுக்கு கொண்டுவர முடியவே முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான பிரதிபா மஹாநாம ஹேவா   தெரிவித்தார்.

பிரதமர் அண்மையில் சிங்கப்பூர் சென்றிருந்த போதாவது, நண்பரே ! எமது நாட்டுக்கு வந்து தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று அர்ஜுன் மஹேந்திரனிடம் கூறியிருக்கலாம். ஆனால், அதனைக் கூட பிரதமர் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள 14 அம்சங்களில் 13 விடயங்களே மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment