எதிர்வரும் நாட்களில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வெளியேறும் நோயாளர்களுக்கு பற்றுச் சீட்டொன்று வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுர அரச வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்துப் பிரிவு என்பவற்றுக்கான கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
அரசு சுகாதார சேவைக்காக எவ்வளவு செலவு செய்தாலும் மக்கள் அந்த செலவு குறித்து பொறுப்பற்ற விதத்தில் இருப்பதனால், அவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த நடவடிக்கை குறித்து யோசித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எது எப்படிப் போனாலும், எதிர்காலத்தில் எக்காரணம் கொண்டும் சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் யோசனை இல்லையெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.