ஆப்கனில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலி

330 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தாலிபன் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தாலிபன் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவதற்காக, தாலிபன் பயங்கரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிபர் கனி அழைப்பு விடுத்துள்ளார். இதை அமெரிக்காவும் வரவேற்றுள்ளது. ஆனால், தாலிபன்கள் இதற்கு இன்னும் பதிலளிக்காமல் மவுனமாக உள்ளனர்.

இந்நிலையில், காபுல் நகரில் நேற்று காலை மக்கள் அலுவலகத்திற்கு செல்லும் பரபரப்பான நேரத்தில் காரில் இருந்த வெடிகுண்டை தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் பலியாகினர். மூன்று பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு தாலிபன் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Leave a comment