அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது – மஹிந்த

229 0

அரசாங்கத்தை வீழ்த்தும் நடவடிக்கைகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த வாரத்தில் கொண்டுவர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படத் தயாரா என வெளிநாட்டு ஊடவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தால், அதற்கு ஆதரவளிக்க தாம் தயார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment