பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான கூட்டு எதிரணியினால் கொண்டுவர எதிர்பார்த்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் நல்லாட்சி அரசாங்கத்தின் காணி இராஜாங்க அமைச்சர் ரி.பீ. ஏக்கநாயக்க கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள எம்.பி. ஒருவர் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக மஹிந்த குழுவினரால் கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெறுமனே பிரதமரை மாற்றுவதற்கான ஒன்றாக மாத்திரம் பார்க்கப்படுவதில்லை. அரசாங்கத்துக்குள்ள பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிப்பதற்கான ஒரு பலப்பரீட்சையும் ஆகும்.
தற்பொழுது அரசாங்கத்திலுள்ள மைத்திரி அணியின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்குவதானது மஹிந்த தலைமையில் அரசாங்கம் அமைக்க தாம் விருப்பம் என்பதை தெரிவிக்கும் பச்சை அறிவிப்பு என அரசியல் மட்டத்தில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.