சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றையும் மற்றும் போதைப் பொருட்களையும் வைத்திருந்த நபர் ஒருவர் மித்தெனிய லபுஹேன்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுடன் இணைந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டாக்களும் 150 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லபுஹேன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.