குளவிக் கொட்டுக்கு இலக்கான 5 தோட்டத் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

234 0

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கொட்டியாகலை கிழ் தோட்ட தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை காலை 09.45.மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதில் நான்கு பெண் தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளரும் பாதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாரளர் ஏ.எஸ்.கே.ஜயசூரிய தெரிவித்தார் .

காயங்களுக்குள்ளான 05 தொழிலாளர்களுள் ஒரு பெண் தொழிலாளர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதோடு ஏனைய 3 பெண்தொழிலாளர்களும் ஒரு ஆண் தொழிலாளர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேயிலை மரத்திற்கு அடிப்பகுதியில் இருந்த குளவிக்கூட்டில் இருந்த குளவிகள் கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதாக பாதிக்கபட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment