இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடு­களின் மீளாய்வு.!

215 0

ஐக்­கிய நாடுகள் மனித  உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடர்  ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள நிலையில் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14  உப­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித  உரிமை பேரவை வளா­கத்தில்  நடை­பெ­ற­வுள்­ளன.  தற்­போ­தைய நிலையில் ஜெனி­வாவில்   பல  உப­குழுக் கூட்­டங்கள் நிறை­வு­பெற்­று­விட்­டன.    இன்னும்  எட்­டுக்கும் மேற்­பட்ட  உப­குழுக் கூட­டங்கள் நடை­பெ­ற­வுள்­ளன.

இந்த  கூட்­டங்­களில்  இலங்கை பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

குறிப்­பாக எதிர்­வரும் 19 ஆம் திகதி  இலங்கை விவ­காரம் தொடர்பில்   ஐ.நா. வின் மீளாய்வு  என்ற   தலைப்பில் ஒரு  உப­குழுக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

குறிப்­பாக  இன்று   13 ஆம்­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு  தரப்­பினர் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் நாளை     புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால்  மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  விசேட உப­கு­ழுக்­கூட்டம்  21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச  மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம்  தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக  தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொடர்­பி­லேயே  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 21 ஆம் இலக்க அறையில்  இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன்  எதிர்­வரும் 16ஆம் திகதி   இலங்கை மனித  உரிமை விவ­காரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே   நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

மேலும்  மற்­று­மொரு சர்­வ­தேச  அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி   ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு  உப­கு­ழுக்­கூட்டம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  இந்­தக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில்   ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில்   நடை­பெ­ற­வுள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான  உபக்­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க  அறையில் நடை­பெ­ற­வுள்­ளது.  இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச   பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

27ஆம் இலக்க அறையில்  இந்த உப­கு­ழுக்­கூட்டம்  நடத்­தப்­ப­ட­வுள்­ளது.  அந்­த­வ­கையில் இந்த   அனைத்து   உபக்குழுக்கூட்டங்களிலும் இலங்கை  தொடர்பான  விடயங்கள்  ஆராயப்படவுள்ளன. விசேடமாக   இலங்கை மனித  உரிமை நிலைமைகள் மற்றும்  ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு  விடயங்கள்   தொடர்பில்  இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

Leave a comment