முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மூன்று மீனவர்கள் மாயம்

207 0

முல்லைத்தீவு நாயாறு கடற்பிரதேசத்தில் மீனவர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றையதினம் (12) மீன் பிடிப்பதற்காக சென்ற மூன்று மீனவர்களே படகுடன் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான மில்ராஜ் மிரெண்டா, 48 வயதான இமானுவேல் மிரெண்டா மற்றும் 24 வயதான ரதன் மிரெண்டா ஆகியோர் சென்ற படகே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டுள்ள அதேவேளை, மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நேற்று (12) நிலவிய மோசமான காலநிலை காரணமாக மீனவர்களை 48 மணிநேரத்திற்கு கடலுக்கு செல்லவேண்டாம் என்று வானிலை அவதான நிலையம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment