ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்க தயார்

210 0

பேஸ்புக் பயன்படுத்தும் உரிமையை உறுதி செய்வதற்காக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுடன் வீதிக்கிறங்கி போராட தயாராக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட முறுகல் நிலை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மறுதினத்துடன் அவசர காலச் சட்டமும் நீக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ள அவர் பேஸ்புக் மீதான தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இனவாத முறுகலை தடுப்பதற்காக என்று கூறிக் கொண்டு அரசாங்கத்துக்கு எதிரான சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முற்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தடை எவ்விதத்திலும் நடைமுறைச் சாத்தியமில்லை என்றும், தற்போது இளைஞர் யுவதிகள் திருட்டுத்தனமாக பேஸ்புக் பயன்படுத்த நேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ள அவர், வெறுப்பு பிரச்சாரங்களை பரப்புவதற்கு பேஸ்புக் பயன்படுத்தப்படுவதாக கூறி அதனை தடை செய்துள்ளமை வேடிக்கை என்றும் உதய கம்மன்பில கூறினார்.

Leave a comment