தாக்குதல் சம்பவத்தில் கிரிக்கெட் அணி வீரர் கைது

224 0

வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் நாவல திறந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது துப்பாக்கியொன்றினால் தாக்குதல் நடாத்தி காயப்படுத்திய சம்பவத்தின் பேரில் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல நாரஹேன்பிட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது தாக்குதலுக்குள்ளான மாணவன் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரமித் ரம்புக்வெல்ல கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment