டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்புக்கு ஐநா சபை பொது செயலாளர் வரவேற்பு

284 0

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரவேற்கத்தக்கது என ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளார் எனவும், இவர்களது சந்திப்பு வருகிற மே மாதம் நடக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. டிரம்ப் – கிம் ஜாங் உன் சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு வரவேற்கத்தக்கது என ஐ.நா.சபை பொது செயலாளர் அன்டோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஐ.நா.சபை பொது செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், மே மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் சந்திப்பு வரவேற்கத்தக்கது. இந்த சந்திப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து அமைதி நிலை திரும்பும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment