சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மதத்தலைவர்களும் இன்று கலவரத்தினால் பாதிக்கப்பட்ட திகன, தெல்தெனிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இது தொடர்பில் சபாநாயகர் ஊடக பிரிவு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மதத்தலைவர்களும் இன்று கலவரத்தினால் பாதிக்கப்பட்ட திகன, தெல்தெனிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இதன்படி சபாநாயகர் தலைமையிலான குழுவினர் கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேசவுள்ளதுடன் அதன்பின்னர் கண்டி பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம் மதத்தலைவர்களுடன் விசேட பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளனர்.
அத்துடன் பாதுகாப்பு படையினரை சந்திக்கவுள்ள குறித்த குழுவினர் இறுதியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசவுள்ளமை குறிப்பிடதக்கது.