மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பட்ஜெட் இருக்கும் – ஓபிஎஸ்

333 0

தமிழக சட்டசபையில் 15-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் வரும் 15-ம் தேதி பட்ஜெட் தாக்கல் ஆக உள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூறியதாவது:-

வரும் 15ம் தேதி தாக்கலாகும் பட்ஜெட், மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இருக்கும். 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என காவிரி ஆலோசனை கூட்டத்தில் உறுதிபட தெரிவித்திருக்கிறோம்.

மாணவி அஸ்வினி கொலை சம்பவம் போல் இனி நடக்காமலிருக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளின் பாதுகாப்பில் அரசு முழு கவனம் செலுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment