இலங்கையில் உள்ள சகல இனவாத, அடிப்படைவாத அமைப்புகளும் உடனடியாக தடைசெய்ய வேண்டும். சகல அடிப்படைவாத அமைப்புகளையும் நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.
இனவாதத்தை தூண்டும் நபர்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கும் சட்டத்தையும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற த்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் பின்னர் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை எழுப்பி கருத்துக் கூறும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சாதாரண சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து கடந்த சில தினங்களாக கண்டியில் இடம்பெற்ற இனவாத முரண்பாடு மிகவும் வேதனைக்குரிய சம்பவமாகும். இந்த நாட்டில் இன வன்முறைகள் மூலமான வரலாறு மற்றும் அதன் விளைவுகள் என்னவென்று நல்லதொரு படிப்பினை எமக்கு உள்ளது. இதனால், பல்வேறு பிரச்சினைகளுக்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. அதன் தாக்கம் இன்றும் நாட்டில் உள்ளது. எம்மால் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடிந்த போதிலும் அதன் மூலமான தாக்கத்தை இன்றும் எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.
கடந்த காலத்திலும் இவ்வாறு இனவாத, மதவாத மற்றும் அரசியல் சூழ்ச்சிகள், அதன் மூலமான இளைஞர்களின் ஆதங்கம் என்பவற்றின் விளைவுகளே நாட்டை பயங்கரவாதம் வரையில் கொண்டு சென்
றது. இலங்கை நாடென்பது சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவரும் இணைந்து வாழும் நாடு என்பதை அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஏற்றுக்கொள்ளாத வரையில் இந்த நாட்டில் அமைதி நிலவப்போவதில்லை. இந்த நாட்டில் நாம் மிகவும் குறைந்த ஆண்டுகாலமே வாழப்போகிறோம். ஆகவே, இந்த நாட்டினை எமது எதிர்கால சமூகத்திற்கும் விட்டுச் செல்ல வேண்டும்.
ஒருசிலர் அல்லது ஒருவர் இருவர் இனவாதத்தை தூண்டுவதன் மூலமாக நாடே அழியும் நிலை ஏற்படும். அதற்கான ஒரு உதாரணமே இந்த கண்டி திகன சம்பவமாகும். இந்த நாட்டில் ஒரு வருடத்தில் பல நூறு பேர் இறக்கின்றனர். பல நூறு வாகன விபத்துக்கள் இந்த நாட்டில் இடம்பெறுகின்றன. அவற்றையெல்லாம் இனவாதமாக கருத முடியாது. எனினும் இவ்வாறான ஒரு சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து திட்டமிட்ட இனவாத நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுக்க வேண்டும். கண்டியில் இடம்பெற்ற இன முரண்பாட்டுக்கு ஒரு சாதாரண சம்பவமே காரணமாகும். இந்த காரணியை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில இனவாதிகள், இனவாத அமைப்புகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டில் உள்ள சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே அச்சத்தில் உள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலையீட்டில் பிரச்சினைகள் சுமுகமாக நிறைவுக்கு வந்துள்ளன. எனினும் இன்று மனித உரிமை அமைப்புகளும் சர்வதேச ஊடகங்களும் தவறான வகையில் இலங்கையை விமர்சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அல்ஜசிரா, பி.பி.சி. ஊடகங்களில் இலங்கை குறித்த தவறான செய்திகள் இந்த சம்பவத்தின மூலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. உண்மைக்கு புறம்பான செய்திகளை கூறி நாட்டின் தன்மையினை அழிக்கும் நட வடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மனித உரிமை அமைப்புகளும் இதனை ஒரு காரணியாக வைத்துக்கொண்டு பேசி வருகின்றன . ஒரு நாட்டில் பயங்கரவாதம் ஒன்று தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில் அதனை முழுமையாக கட்டுப்படுத்த அரசாங்கமும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். இதில் நியாயம், தர்மம் ஆகியவற்றை வேடிக்கை பார்த்து எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இதில் மனித உரிமைகள் அமைப்புகளின் கருத்துகளை அவதானித்துக்கொண்டு செயற்பட முடியாது.
இலங்கையில் செயற்படும் இனவாத அமைப்புகள் இவ்வாறான சம்பவங்களை சாதகமாக வைத்துக்கொண்டு இனவாதத்தை கக்கி வருகின்றன. இதனை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றால் முத லில் இலங்கையில் உள்ள சகல இன வாத, அடிப்படைவாத அமைப்புகளையும் உடனடியாக தடைசெய்ய வேண்டும். சகல அடிப்படைவாத அமைப்புகளையும் தடை செய்யப்ப ட்ட அமைப்புகளாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும். இனம் சார்ந்த அமைப்புகள் இருக்கலாம். ஆனால் அவை நாட் டில் இன வாதத்தை தூண்டும் வகையில் செயற்பட முடியாது.
இனவாதத்தை தூண்டினால் அந்த நபர் களை 10 ஆண்டுகால சிறையில் அடைக்க முடியும் என்ற சட்டம் இலங்கையில் உள்ளது. அதனை உடனடியாக நடைமுறை க்கு கொண்டுவர வேண்டும். மக்கள் ஐக் கியத்தை நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர பிரிவினையின் பக்கம் ஈர்க்கப்பட முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.