அம்பாறை ஹோட்டலில் இருந்தது ‘மாவு கட்டி’ – அரசாங்க ஆய்வாளர்

393 0

அம்பாறை ஹோட்டலில் இருந்த மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மாத்திரை என கூறப்பட்ட பதார்த்தம் அவ்வாறானதல்ல என அரசாங்க ஆய்வாளர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த பதார்த்தம் “மாவு கட்டியென” இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க ஆய்வாளர் ஏ. வெலிஅங்க தெரிவித்துள்ளார்.

அம்பாறை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த 27ம் திகதி உணவருந்த வந்த ஒரு நபர் இதனை சமூக ஊடகங்களில் பூதாகரமாக்கியதை அடுத்து குறித்த ஹோட்டலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதுடன், குறித்த பகுதியில் உள்ள ஏனைய வர்த்தக நிலையங்களுக்கும் பள்ளிவாசலுக்கும் தாக்குதல் நடத்தப்பட்டது.

பொய்யான தகவல்களை பரப்பி பிரச்சனைகளை ஏற்படுத்த முற்படுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment