யாழ்ப்பாணம் – அளவெட்டிப் பகுதியில் இரு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறியதால் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாழும் கோணப்புலம் முகாமில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அளவெட்டிப் பகுதியினைச் சேர்ந்த தேசராசா உதயகுமார் (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது:- இச் சம்பவத்தில் உயிரிழந்தவருக்கும் அவருடைய உறவினருக்கும் இடையில் மிக நீண்ட காலமாக குடும்ப ரீதியில் தகராறு இருந்துவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினர்களும் கோணப்புலம் முகாமில் வைத்து சந்தித்த வேளை இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன் போது ஒரு குடும்பத்தைச் சேர்தவர்கள் இணைந்து மற்றவரை தாக்கியுள்ளனர். இதனால் அவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் அங்கேயே உயிரிளந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதணைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

