திகன உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுமென உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்களின் பின்னால் அரசியல் தேவைகளுக்காக ஒரு குழுவினர் செயற்படுவதாகவும் வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட குழுவினரே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் கபீர் ஹசிம் தெரிவித்துள்ளார்.
மேலும், சமூக வலைத்தளங்கள் ஊடக மக்களை தூண்டும் வகையில் செய்திகள் பரவுகின்ற விதம் குறித்து கட்சி என்ற ரீதியில் தான் கவலை அடைவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.