சிறுவனை கொலை செய்த நபருக்கு விளக்கமறியல்

246 0

சிலாபம் – இரணவில, பகுதியில் 10 வயது சிறுவனை கொலை செய்த நபருக்கு மார்ச் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சிலாபம் நீதவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

10 வயதான சுசித் நிர்மல் என்ற சிறுவனை கடத்திச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

ஜூட் பொன்சேகா எனும் சந்தேக நபரே முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நயாரூ மீன்பிடி கிராமத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment