தம்புத்தேகம ஆர்ப்பாட்டம் ; கைது செய்யப்பட்ட 51 பேருக்கும் பிணை

334 0

தம்புத்தேகமயில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதுவெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 51 பேரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு தம்புத்தேகம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே குறித்த 51 பேரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள 17,000 ஏக்கர் விவசாய நிலத்திற்கு அருகில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் அந்நிறுவனம் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரை பயன்படுத்தவுள்ளதாகக் கூறியயே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் குறித்த 51 பேரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே அவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment