கடும் ஆபத்து நிறைந்த நிலையில் தொடரும் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் – நாள் 4

24377 0

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப் பயணம் நேற்றைய தினம் காலை லக்சம்புர்க் நாட்டுக்குள் வந்தடைந்து நகர முதல்வருக்கு மனு கையளித்ததுடன் தொடர்ந்து யேர்மனி எல்லையை நோக்கி பயணித்து 5 ,Route de l’ Europe 5531 Remich நிறைவுபெற்றது. இன்று காலை யேர்மனியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.

தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி பயணிக்கும் ஈருருளிப்பயணம் கடும் மோசமான காலநிலையுடன் போராடி தொடர்த்தவண்ணம் இருக்கிறது. இருந்தும் சில அசம்பாவிதங்களை சந்தித்தே ஆகவேண்டியுள்ளது. நேற்றயதினம் ஈருருளிப்பயணத்திற்கு உதவியாக சென்ற வாகனம் பெரு வீதியில் விபத்துக்குள்ளாகி சேதமாகியுள்ளது. வாகனத்தில் பயணித்தவர்களுக்கு ஒரு ஆபத்து எதுவுமில்லை.
ஈருருளிப்பயணத்தை ஆரம்பத்தில் திட்டமிட்டபடி சில வீதிகள் ஈருருளியில் பயணிக்க தடை செய்யப்பட்டுள்ளது. காவல் துறையின் ஆலோசனைப்படி ஈருருளிப்பயணம் எமது இலட்சியத்தை அடையும் வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .இன்றைய தினம் யேர்மனியில் Saarbrücken நகரில் மக்கள் சந்திப்பும் நடைபெறும் . மேலதிக தகவல் இணைப்பில் உள்ளது.

எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.

பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மனிதநேய ஈருருளிப் பயணம் ஐநா நோக்கி செல்கின்றது :

1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.

4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Leave a comment