லசந்தவின் பேரில் என்னைக் கைது செய்ய சதி நடக்கிறது- கோட்டாபய அறிக்கை

204 0

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக நாட்டுக்கு எடுத்துக் காட்டி தன்னைக் கைது செய்வதற்கு அரசாங்கம் காரணம் தேடி வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசேட அறிவித்தல் ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த காலத்தில் எவன்கார்ட், ரக்னா லங்கா மற்றும் மிக் விமான கொள்வனவு போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர்.

அண்மைக்காலமாக சில ஊடகங்களிலும், அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் பேச்சுக்களில் தன்னைச் கைது செய்யப் போவது தொடர்பில் எடுத்துவரும் எத்தனங்கள் வெளிப்படுவதாகவும் அவர் நீண்ட அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

Leave a comment