மலேசியாவில் இலங்கைத்தூதுவர் மீது மேற்கொண்ட தாக்குதல், இலங்கை மீது மேற்கொள்ளப்பட்டதாகும் – மஹிந்த

293 0

m4-600x450மலேசியாவில் இலங்கைத் தூதுவர் தாக்கப்பட்டமையானது நாட்டின் மீது மேற்கொண்ட தாக்கதலாக தான் பார்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மலேசியா சுற்றுலாவை முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பிய மஹிந்த கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான் திட்டமிட்ட வகையிலே மலேசியா சுற்றுப்பயணம் அமைந்ததாகவும்,அதன்படியே தன்னுடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் தான் செல்லவிருந்த விகாரை ஒன்றின் தேரர் தாக்கப்பட்டமையினால்  குறித்த தேரருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு அங்கு வெல்வதை தவிர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கைகளுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் பாரிய வேற்றுமை உள்ளதாகவும், எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் வரை தான் கட்சியுடன் இணைந்திருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.