அனைத்து தரப்புகளினதும் ஆதரவுடன் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுக்குறுந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை பயிற்சிக் கலாசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 35ஆவது ஆண்டு பூர்த்தி நிகழ்வும் 74ஆவது ஆரம்ப பயிற்சி பாடநெறியைப் பயின்ற பயிலுனர்களின் நிறைவு விழாவும் நேற்று இடம்பெற்றதுடன் இதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

