ரவி கருணாநயக்கவிடம் 4 மணி நேரம் வாக்கு மூலம் பதிவு

201 0

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் இன்று (27) நான்கு மணி நேரம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அழைப்புக்கு ஏற்ப, இன்று காலை 9.30 மணிக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தந்த முன்னாள் நிதி அமைச்சர் வாக்கு மூலம் வழங்கிய பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகள் லஞ்ச ஊழல் விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே இவர் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment