உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவானோர் பெயர் விபரம் 3 ஆம் திகதி வர்த்தமானியில்- மஹிந்த

207 0

உள்ளுராட்சி சபைத் தேர்தல் மூலம் 340 உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவு செய்யப்பட்ட 8,689 உறுப்பினர்களின் பெயர் விபரத்தை எதிர்வரும் சனிக்கிழமை வர்த்தமானி மூலம் வெளியிடப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உரிய உள்ளூராட்சி மன்றங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றி கட்சியின் செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பது அவசியமாகும் என்றும் மஹிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment