வியானா நீரோடையில் காணமல் போன ஆசிரியர் சடலமாக மீட்பு

253 0

பதுளை, மஹியங்கன வீதியில் பயணம் செய்து கொண்டிருந்த மோட்டர் வாகனம் ஒன்று நேற்று (26) மாபாகட வெவ, 17 ஆம் கட்டைக்கு அருகில் வியானா நீரோடையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

மோட்டர் வாகனத்தில் பயணம் செய்த நால்வரில் மூவர் காப்பாற்றப்பட்டதுடன் காணமல் போனவர் இன்று (27) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விபத்து நடந்த இடத்திலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் வியானா நீரோடையின் ஒறுபெதி வெவ பகுதியில் மிதந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

திஸ்ஸபுர வித்தியாலயத்தின் ஆசிரியரான 29 வயதுடைய நளின் காரியசவம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

Leave a comment