ஏனைய மாகாணங்களை விட, வடக்கு மாகாணத்திற்கு அதிகளவிலான நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, வட மாகாண மகளிர் விவகார சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாண சபையும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து நடத்திய நடமாடும் சேவை, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற போது இவ்வாறு குறிப்பிட்டார்.

