மன்னார் தேட்டவெளி ஜோசவாஸ் நகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார் என இளைஞனின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மன்னார் விடத்தல் தீவைப் பிறப்பிடமாகவும், தேட்டவெளி ஜோசவாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் அருள்ராஜ் (வயது 33) என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார் என கடந்த திங்கட் கிழமை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் இளைஞன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்குமாறும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.