பொதுக் கொள்கை என்ன என்பதை ரெலோ வெளிப்படையாகக் கூறவேண்டும்!

21194 0

பொதுக் கொள்கை என்­ப­தன் ஊடாக ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா என்ன கூற வரு­கின்­றார் என்­பதை அவர் வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

பொதுக்­கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் தமிழ்க் கட்­சி­கள் அனைத்­தும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் சிறி­காந்தா அழைப்பு விடுத்­தி­ருந்­தார். அது தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் தெரி­வித்­தா­வது,

பொதுக் கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் ஒன்­றி­ணை­யுங்­கள் என்று கூறு­ப­வர்­கள் அதன் ஊடாக என்ன கூற வரு­கின்­ற­னர் என்­பதை வெளிப்­ப­டை­யா­கக் கூற வேண்­டும். தமது பொதுக் கொள்கை என்ன என்­ப­தைக் கூறி­னால் தான் நாம் ஆராய முடி­யும்.

தேர்­தல் காலங்­க­ளில் மக்­க­ளுக்கு கூறி­ய­வற்­றுக்கு முற்­றி­லும் மாறாக புதிய அர­ச­மைப்­பில் ஒற்­றை­யாட்­சிக்­கும், பௌத்­தத்­துக்கு முன்­னு­ரிமை கொடுக்­க­வும் இணங்­கி­யுள்ள கூட்­ட­மைப்­பு­டன் கூட்­டுச் சேர முடி­யாது. அப்­ப­டி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்­கம் வகிக்­கும் ரெலோ அமைப்பு அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைய அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.

அர­ச­மைப்பு இடைக்­கால அறிக்­கையை நாம் பொதுக் கொள்­கை­யாக ஏற்­றுக் கொள்ள முடி­யாது. பிழை­யான விடங்­க­ளைச் சரி எனக் கூறிக் கொண்­டி­ருக்­கும் கூட்­ட­மைப்­பு­டன் இருந்து கொண்டு இணைப்­புப் பற்­றிப் பேசிப் பய­னில்லை. ரெலோவை பிரிந்து வாருங்­கள் என்று கோர­வில்லை, அது அவர்­க­ளின் சுய­வி­ருப்பு.

தேர்­தல் காலத்­தில் ஆச­னப் பங்­கீட்­டுக்­காக கூட்­ட­மைப்பை விட்டு வில­கு­கின்­றோம் என்று கூறி­ய­வர்­கள் சில மணி நேரத்­தி­லேயே கூட்­ட­மைப்­பு­டன் இணைந்­த­னர். நிலை­யான கொள்கை ஏமு் இல்­லாத இவர்­கள் அனை­வ­ரை­யும் அழைப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.- என்­றார்.

Leave a comment