புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

225 0

திருத்தப்பட்ட பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் புதிய பிரதிகள் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி ஜெனீவாவில்  மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளதனால், இதற்கு முன்னர் அமைச்சரவைக்கு இப்பிரதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது மிக விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டணி இப்புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நகலுக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒத்ததாகவே புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்ட நகலும் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்புதிய சட்டம் பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்படின் பழைய சட்டம் செல்லுபடியற்றதாக மாறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment