டிரான் அலெஸின் வழக்கு 23ம் திகதி

298 0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் உள்ளிட்ட நால்வருக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி எதிர்வரும் 23ம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் விகும் கழுஆரச்சி உத்தரவிட்டுள்ளார்.

சுனாமி அனர்த்தம் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்காக திறைசேரியினால் வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டதை அடுத்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a comment