பஸ் தீப்பற்றியதால் 17 பேர் காயம்-12 பேர் படையினர்!

306 0

தியத்தலாவ, கஹாகொல்ல எனுமிடத்தில் வைத்து, தனியார் பஸ்ஸொன்று தீப்பற்றிக்கொண்டதில், 17 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பஸ்ஸில் ஒரு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே, அந்த பஸ் தீப்பற்றிக்கொண்டதாக அறியமுடிகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து பண்டாரவளைக்கு பயணித்த பயணிகளில் சிலர், பண்டாரவளையில் வைத்து இந்த பஸ்ஸில், தியத்தலாவையை நோக்கி பயணிப்பதற்கு  ஏறியுள்ளனர்.

இந்த பஸ், தியத்தலாவை ஊடாக ஹேபரவ வரையிலும் பயணிக்கும்.

பயணிகளின் பாதங்களிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயமடைந்த 17 பேரில், 12 பேர் படையினர் என தெரியவருகின்றது. அத்துடன், பெண்களும் அடங்குகின்றனர்.

Leave a comment