கம்­பஹாவில் மாபியாவா.?

341 0

கம்­பஹா பொலிஸ் பிரி­வுக்குட்­பட்ட கெஹல்­பத்­தர பகு­தியில் வர்த்­தகர் ஒரு­வரை சுட்­டுக்­கொலை செய்­தமை தொடர்பில் சந்­தேகநபர்­க­ளுக்கு, மோட்டார் சைக்­கிளை வழங்கி கொலைக்கு உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக கூறப்­படும் இரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

மேல் மாகா­ணத்தின் வடக்கு பிராந்­திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹ­னவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பேலி­ய­கொட குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரிகள் முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கை­யி­லேயே அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் சந்­தேக நபர்­களில் பாதாள உலக குழு உறுப்­பினர் ஒரு­வரும் உள்­ள­டங்­கு­வ­தா­கவும் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கம்­ப­ஹாவில் இடம்­பெற்ற  தொடர் துப்­பாக்கிச் சூடுகள், கொலைகள் தொடர்பில் விசா­ரணை செய்­துள்ள பேலி­ய­கொட குற்றத் தடுப்புப் பிரிவினர் அவை மண் வர்த்­தகம் தொடர்பில் அங்கு நிலவும் மாபியா நட­வ­டிக்­கையின் பிரதி பலன் என்­ப­தற்­கான ஆதாரங்­களை திர

ட்­டி­யுள்­ளனர். அத்­துடன் இந்த மாபி­யாவின் பின்­ன­ணியில்  தற்­போது சிறையில் உள்ள பிர­பல பாதாள உலகத் தலைவன் மாஹி­லங்­க­முவே சஞ்­சீ­வவின் தொடர்பு குறித்தும் விசா­ர­ணை­யா­ளர்கள் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கடந்த 6 ஆம் திகதி 65 வய­து­டைய வர்த்­தகர் கே.நெவில் பெரேரா என்­பவர் காலை 8.20 மணி­ய­ளவில் ஸ்கூட்டி டியோ ரக மோட்டார் சைக்­கிளில் வந்த அடை­யாளம் தெரி­யாத இரு­வ­ரினால் சுட்­டுக் ­கொல்­லப்பட்­டி­ருந்தார். இது தொடர்பில் பிர­தான விசா­ர­ணைகள் கம்­பஹா  சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சகர் முதித்த புசல்­லவின் நேரடி கண்­கா­ணிப்பில் விசேட பொலிஸ் முன்­னெ­டுக்கும் நிலையில், சந்­தேகநபர்­களைக் கைது செய்யும் மேல­திக பொறுப்பு பேலி­ய­கொட குற்­றத்­த­டுப்புப் பிரி­விடம் பிராந்­தி­யத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹ­ன­வினால் ஒப்­ப­டைக்­கப்பட்­டி­ருந்­தன.

அதன்­படி, பேலி­ய­கொட குற்­றத்­ த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சகர் மகேஷ் பண்­டா­ரவின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக பொறுப்­ப­தி­காரி ஜயந்த தஹ­னக தலை­மை­யி­லான குழு­வினர், உதவி ஒத்­தாசை புரிந்த இருவரை கைது செய்துள்ளனர்.

30 வயதுடைய பிரசன்ன மதுஜித் எனும் பாதாள உலக உறுப்பினரும் அவரது உறவுமுறை சகோதரரான 23 வயதுடைய பீ.தினுக என்பவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a comment