சமையல் எரிவாயுவின் விலையை நினைத்தவுடன் அதிகரிக்க முடியாது- அமைச்சர் ரிஷாட்

224 0

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லையென வர்த்தக வானிபத் துறை அமைச்சர் ரிஷாட் பத்தியுத்தீன் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு உள்ள “லிட்ரோ” எரிவாயு நிறுவனமும் தனியாருக்குச் சொந்தமான “லாப்” எரிவாயு நிறுவனமும் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளன. இருப்பினும், இன்று அல்லது நாளை இந்த வேணை்டுகோளை நிறைவேற்ற முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு ஒர் அத்தியாவசிய பொருள் என்பதனால், அதன் விலையை அதிகரிப்பதற்கு அமைச்சின் செயலாளர் தலைமையிலான அமைச்சின்குழு, மலிக் சமரவிக்ரமவின் தலைமையிலான பாராளுமன்ற வாழ்க்கைச் செலவுக் குழு என்பவற்றுடன் அமைச்சரவை என்பவற்றின் அனுமதியையும் பெற வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment